classic
stringlengths 19
1.22k
| Description
stringlengths 5
2.28k
|
---|---|
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்\nமாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்\nகல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின்\nநல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்\nகொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த\nமாக்கண் முரசம் ஓவில கறங்க\nஎரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்\nபெருநல் யானை போர்க்களத் தொழிய\nவிழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்\nபுரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை\nநீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்\nகாழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்\nபிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து\nவானத் தன்ன வளநகர் பொற்ப\nநோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்\nஉயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்\nநிவந்த யானைக் கணநிரை கவர்ந்த\nபுலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற்\nபெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்\nயாவரும் வருக ஏனோருந் தம்மென | அம்பு ஏந்திய மார்பினர்- கோட்டை வெற்றியில் புண் பட்ட செல்வர் தன் யானை வீழ்ந்த பின்னரும் தாக்கி வென்ற குரிசிலர் பேருதவி புரிந்த ஊக்கத்தார் யானை கவர்ந்துவந்த பெருஞ்செய் ஆடவர் மற்றும் பிறர் ஆகியோருக்கெல்லாம் அவைக்கு வந்ததும் முதல் பணியாக விருது வழங்கிச் சிறப்பு செய்தான். யாவரும் வருக. அழைக்கப்படாத ஏனோரும் வருக. யான் அழைக்காவிட்டாலும் தாமே வருக. - என்று வரவேற்றுச் சிறப்புச் செய்தான். மறவர்- பகைவரின் வில்லைக் கவர்ந்து, அவர்கள் முன்பு எய்த அம்புகளை மார்பிலே தாங்கி ‘மா’ என்னும் வெற்றித் திருமகளைத் தோளிலே சுமந்துகொண்டிருப்பவர்கள். எயில் உழந்த செல்வர் ‘இட்டுவாய்’ என்பது கிட்டம் ஆகும்படி சுட்ட செங்கல். அகழியானது, மேட்டு நிலத்தில் கல்லை உடைத்தும், பள்ள நிலங்களில் கிட்டமாக்கிய செங்கலை இட்டும் அமைக்கப் பட்டிருந்தது. அகழியை அடுத்து மதில். அகழியைத் தாண்டி மதிலில் ஏறும்போது துன்புற்ற வீரர் செல்வர். போர்முரசு - ‘கொல் ஏறு’ என்றது சிங்கத்தை. சிங்கத்தின் தோலை உரித்துச் சீவிப் பதப்படுத்தாமல் அப்படியே போர்த்திச் செய்யப்பட்டது. விழுமிய வீழ்ந்த குரிசிலர் - போர்முரசு முழங்கும்போது, பகைவரின் படைக்கு நடுவில் சென்று போரிடுகையில் தான் ஏறிவந்த யானை போரில் சாய்ந்தபோதும் அஞ்சாமல் போராடி விழுமிய வெற்றியைத் தேடித் தந்த அரச பரம்பரையைச் சேர்ந்த குரிசிலர். பொலம்பூந் தும்பை - பிறரது நாட்டை வெல்லச் செல்வோர் தும்பைப் பூ மாலையைத் தலையில் சூடிக்கொண்டு செல்வர். வெற்றிக்குப் பின் அரசன் அவர்களுக்குப் பொன்னால் செய்த தும்பைப்பூவை அணிவிப்பான். முறை கருதுபு சூட்டி - பொற்பூ அணிவிக்கும்போது விருது பெறுவோர் யார் என்று பார்க்காமல் போர்ச்சாதனையைத் தரவரிசை செய்து விருது வழங்குவான். உயர்ந்த உதவி ஊக்கலர் - இந்த உயர்ந்த பணியைச் செய்க என்று பிறருக்கு ஊக்கம் தந்துகொண்டு இருக்காமல், தாமே அதனை உதவியாகக் கருதிச் செய்து முடிப்பவர். நிறம் சிதை கவயம் - (ய=ச போலி) கவசத்தைத் துளைத்து நெஞ்சைச் சிதைத்த காயம். கணையலை - அலைபோல் வந்துகொண்டே இருக்கும் அம்பு அலை. காழ்மண்டு எஃகம் - ஆணி போடப்பட்ட கேடயம். பிரிபிணை அரிந்த நிறம் - பிரிந்து பிணைந்திருக்கும் எலும்புகள் அரிந்து காயம் பட்ட மார்பு. வளநகர் - வானம்போல் பரந்துகிடக்கும் அரண்மனை. இதனைப் பொலியச் செய்தவர் மார்பில் போர்த்தழும்பு பட்ட மறவர். ஊன்சாய் மார்பு - மார்புக் கூடு வலிமை மிக்க குறடு போல் கோக்கப்பட்டது. இதில் காயம் பட்டு ஊன்தசை தொங்கும் மார்பு. பெருஞ்செய் ஆடவர் - செய் என்றால் வயல். பெருஞ்செய் என்றால் போர்க்களம். போர்க்களத்து ஆடவர் படைவீரர்கள். இவர்கள் ஓங்கி உயர்ந்த யானைக் கணத்தைப் போர்க்களத்திலிருந்து கவர்ந்து வந்தவர்கள். சந்தனம் பூசிய மார்பில் பூமாலை அணிந்தவர்கள். |
வரையா வாயிற் செறாஅ திருந்து\nபாணர் வருக பாட்டியர் வருக\nயாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென\nஇருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்\nகொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக் | நெடுஞ்செழியன் அரண்மனையானது உள்ளே நுழையத் தடை செய்யப்படாத வாயிலைக் கொண்டது. எத்தனைப் பேர் வந்தாலும் யார் வந்தாலும் சினம் என்பதே இல்லாமல் இருந்துகொண்டு செழியன் கொடை வழங்கினான். பண்ணிசைத்துப் பாடும் பாணர் வருக பண்ணிசைத்துப் பாடும் பாட்டியர் வருக புதுப்புது பாடல் பாடும் புலவர் வருக ஊது கருவியால் இசை பாடும் வயிரியர் வருக எனக் கூவி அழைத்து வழங்கினான். அவர்தம் சுற்றத்தாரையெல்லாம் பேணும் அளவுக்கு வழங்கினான். வழங்கிய பொருள்களைக் கொண்டுசெல்லத் தேரும் யானையும் வழங்கினான். வழங்கும் பொருள்களின் மதிப்பை எண்ணிப் பார்க்காமல் வீசுவதுபோல் வாங்குவோரை மதித்து வழங்கினான். |
களந் தோறும் கள் ளரிப்ப\nமரந் தோறு மை வீழ்ப்ப\nநிண வூன்சுட் டுருக் கமைய\nநெய் கனிந்து வறை யார்ப்பக்\nகுரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற்\nபரந்து தோன்றா விய னகராற் | பாராட்டு, விருது, பரிசு - இவையெல்லாம் அரண்மனையில் வழங்கப்பட்டன. பரிசு பசியாற்றுமா? இதோ! மதுரை நகரத்துக்குள் ஆங்காங்கே உணவு விருந்து. களம் கண்ட இடங்களிலெல்லாம் கள் விருந்து. மரம் கண்ட இடங்களிலெல்லாம் மை என்னும் வெள்ளாட்டுக் கடாக்கறி சமைத்த விருந்து. பாறை கண்ட இடங்களிலெல்லாம் நெய் வழிய வழியச் சுட்டுத் தரும் நிணவூன் விருந்து. கட்டிய வீடு இருக்கும் இடங்களிலெல்லாம் மழை மேகம் போலப் புகை எழும்பச் சமைத்துத் தரும் உணவு விருந்து. இப்படித்தான் மதுரை நகரம் விளங்கியது. |
அருளில் பிறந்து இட்டு அருளில் வளர்ந்து இட்டு\nஅருளில் இழிந்து இளைப்பு ஆற்றி மறைந்து இட்டு\nஅருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி\nஅருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே | இறைவன் தமது திருவருளாலே உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி செய்து, இறையருளாலே அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி செய்து, இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில் ஆசைகளை குறையும் படி செய்து, ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை நீக்கி, உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை வெளிப்படும் படி செய்து, இறையருளால் கிடைக்கின்ற பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து, தெகிட்டாத அமிழ்தத்தை ஊட்டிக் கொடுத்து, இறையருள் ஆகவே எமது குருநாதராகிய இறைவன் எமக்குள் புகுந்தார். |
அறிவில் அணுக அறிவு அது நல்கி\nபொறி வழி ஆசை புகுத்தி புணர்த்தி\nஅறிவு அது ஆக்கில் அருள் அது நல்கும்\nசெறிவோடு நின்றார் சிவம் ஆயினாரே | ஞானத்தின் மூலம் இறைவனை அடைவதற்கு தேவையான அறிவை உள்ளுக்குள்ளே குருநாதராக இருக்கின்ற இறைவன் கொடுத்து, உடலில் உள்ள ஐந்து விதமான புலன்களின் வழியே பல விதமான ஆசைகளை உடலுக்குள் புகுத்தி, அந்த உடலோடு தாமும் கலந்து நின்று அந்த ஆசைகளை அனுபவிக்கச் செய்து, ஆசைகள் தீர்ந்த நிலையில் அவற்றிற்கு மேலான ஞானத்தை உயிர்கள் பெற்றுவிட்டால் அதன் பலனாக திருவருளை உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனே கொடுப்பான். அப்படி இறைவன் கொடுத்த அருளில் உச்ச நிலையை அடைந்து நிற்கின்ற அடியவர்கள் சிவமாகவே ஆகி விடுவார்கள். |
அருள் எங்கும் ஆன அளவை அறியார்\nஅருளை நுகரார் அமுதம் உகந்தோர்\nஅருள் ஐங் கருமத்து அதி சூக்கம் உன்னார்\nஅருள் எங்கும் கண் ஆனது ஆர் அறிவாரே | இறையருளே அண்டசராசரங்கள் எங்கும் மற்றும் உலக வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபித்து இருக்கின்ற அளவை யாரும் அறிவதில்லை. இறையருளை அனுபவிக்காதவர்கள் அதன் மூலமே கிடைக்கக் கூடிய அமிழ்தத்தை மட்டும் அருந்த விரும்புகின்றார்கள். இறையருளே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களின் மிக நுண்ணியமான மூல சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருப்பதை நினைத்து பார்க்காமல் இருக்கின்றார்கள். இறையருளே அனைத்தையும் பார்க்கின்ற கண்களாகவும் இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். |
நான் அறிந்து அன்றே இருக்கின்ற ஈசனை\nவான் அறிந்தார் அறியாது மயங்கினர்\nஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்\nதான் அறியானை பின்னை யார் அறிவாரே | எமக்குள்ளே யான் ஆராய்ந்து அறிந்து கொண்ட இறைவனே உயிர்கள் பிறவி எடுக்கின்ற அன்றே அதற்குள் மறைந்து நிற்கின்றான். வானுலகத்து தேவர்களும் அந்த இறைவன் இருப்பதை அறிந்து கொண்டாலும் அவனின் உண்மையான தன்மை எதுவென்று அறியாமல் நான் என்கின்ற ஆணவத்தில் மயங்கி நிற்கின்றார்கள். நான் என்கின்ற உடம்பு எது என்று அறிந்து கொண்டு அதற்கு உள்ளே உயிராக ஒன்றி இருக்கின்ற ஒளி வடிவான இறைவனை தமக்குள்ளே ஆராய்ந்து தனது வாழ்நாள் காலத்திலேயே அறிந்து கொள்ளாதவன், உயிர் போன பின்பு எப்படி அறிந்து கொள்ளப் போகின்றான்? |
தானே அறியும் வினைகள் அறிந்த பின்\nநானே அறுதி என் நந்தி அறியும் கோன்\nஊனே உருக்கி உணர்வை உணர்ந்த பின்\nதேனே அனையன் நந்தி தேவர் பிரானே | இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவின் துணையால் அடியவர்கள் தாமே அறிந்து கொள்ளக் கூடிய தங்களின் வினைகளையும் அவற்றை நீக்குகின்ற வழிகளையும் அறிந்து கொண்ட பிறகு, அவர்களின் அறிவுக்கு அவர்களே வகுத்துக் கொண்ட வரை முறைப்படி இருப்பதை அவர்களுக்குள் இருக்கின்ற குருநாதராகிய இறைவன் அறிவான். இப்படி வரை முறைப்படி வாழ்வதினால் தங்களின் வினைகள் அழிந்து போகும் போது அவர்களுக்குள் இருந்து பேரன்பானது வெளிப்படுகின்றது. அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் மேல் கொண்ட பேரன்பினால் தமது உடலையும் உருக்கிக் கொள்ளுகின்ற அளவிற்கு உருகின்ற மனதின் உணர்ச்சி நிலையை உண்மையாக உணர்ந்த பிறகு எவ்வளவு அருந்தினாலும் தெகிட்டாத தேனைப் போன்று அவர்களுக்கு துணையாக இருப்பவன் குருநாதனாகவும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருக்கின்ற இறைவன். |
தேர்ந்து அறியாமை இன் காலங்கள் போயின\nபேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை\nஆர்ந்து அறிவார் அறிவே துணை ஆம் என\nசார்ந்து அறிவான் பெரும் தன்மை வல்லானே | தமக்குள்ளே இருக்கின்ற இறைவனின் திருவருளால் பிறவி இல்லாத நிலையை அடைய முடியும் என்பதை அறிந்து கொள்ளாத தன்மையினால் உயிர்களின் ஒரு பிறவியின் காலங்கள் வீணாக கழிந்து போகின்றது. இப்படி வீணாக வாழ்நாளை கழிக்காமல் இறைவனை தேடுகின்ற உயிர்கள் எது என்பதை பிரித்து அறிகின்றவன் பிறை நிலாவையும் கங்கையையும் தலையில் சடையாகச் சூடிக்கொண்டு பிறவி இல்லாத நிலையை அருளும் எமது தலைவனாகிய இறைவன் ஆவான். அவனை தமக்குள்ளே ஆராய்ந்து அறிகின்றவர்களுக்கு உண்மை அறிவாக எப்போதும் துணையாக இருப்பான். அந்த இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்துகின்ற அறிவுத் துணையை எப்போதும் சார்ந்து இருந்து அனைத்தையும் அறிந்து கொள்ளுகின்ற அடியவர்கள் மிகப் பெரிய தன்மைகளை அடையும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். |
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்\nவெறுப்பு இருள் நீக்கில் விகிர்தனும் நிற்கும்\nசெறிப்பு உறு சிந்தையை சிக்கென நாடில்\nஅறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே | உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின் உள்ளே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும் உண்மைப் பொருளாக தோன்றும். அந்த திருவருள் ஜோதியால் ஆணவமாகிய மலத்தை நீக்கி விட்டால் அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன் அடியவருக்குள் வந்து நிற்பான். அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில் உறுதியாக நிற்கின்ற சிந்தனையை விடாது பற்றிக் கொண்டு இறைவனை தேடும் போது உள்ளுக்குள் உணரக்கூடிய முழுமையான திருவருள் காட்சி தோன்றும். அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம். |
காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்\nதீண்டற்கும் சார்தற்கும் சேயன் நாதம் தோன்றிடும்\nவேண்டி கிடந்து விளக்கு ஒளி ஆய் நேசம்\nஈண்டி கிடந்து அங்கு இருள் அறும் ஆறே | கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு மிகவும் கடினமானவன், எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாதவன், உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன், வெளியில் தீண்டி பார்ப்பதற்கும் பற்றிக் கொண்டு இருப்பதற்கும் முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன், உள்ளுக்குள்ளே நாதமாக தோன்றுபவன், அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி கிடக்கின்ற அடியவர்களுக்கு உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற ஜோதியாகிய அன்பின் வடிவமாக வருகின்றவன். இப்படிப்பட்ட இறைவனின் திருவருளை பெற்றுக் கொண்டு அதிலேயே கிடக்கும் போது அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற அனைத்து விதமான மலங்களும் நீங்கிப் போய்விடும் வழியாக அதுவே இருக்கும். |
பொருள் பேதம் ஈசன் இரவும் பகலும்\nஉரு அது ஆவது உடலும் உயிரும்\nஅருள் அது ஆவது அறமும் தவமும்\nபொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே | மாயையாகிய உலகத்தில் பொருளாக பிரித்து அறிந்து கொள்ள இறைவன் அருளியது இரவும் பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும். அதை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற உருவமாக இருப்பது இறைவன் அருளிய உடலும் அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும். அப்படி வினைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் இறையருளால் உள்ளுக்குள் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படி கடை பிடிக்கின்றவர்களுக்கு அந்த தர்மத்தின் பலனும் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் பலனுமே இறைவன் கொடுக்கின்ற திருவருளாக இருக்கின்றது. அந்த திருவருளே உண்மைப் பொருளாக அடியவருக்குள் நிற்கின்ற பேரின்பம் ஆகும். |
பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்\nஇருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்\nபொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே\nதிருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே | மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன். |
நான் இது தான் என நின்று இலன் நாள் தோறும்\nஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்\nவான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்\nநான் இது அம்பர நாதனும் ஆமே | நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல் தினந் தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன் தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்து கொள்கின்றான். அப்போது வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போல தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான். அதன் பிறகு தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான். |
அவனும் அவனும் அவனை அறியார்\nஅவனை அறியில் அறிவாரும் இல்லை\nஅவனும் அவனும் அவனை அறியில்\nஅவனும் அவனும் அவன் இவன் ஆமே | இறைவனும் அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும் உண்மையான பரம்பொருளை அறிந்து கொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும் அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன் இறைவனாக தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக வீற்றிருப்பான். |
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்\nஊன் என உள் உயிர் என்ன உடல் நின்று\nவான் என வானவர் நின்று மனிதர்கள்\nதேன் என இன்பம் திளைக்கின்ற ஆறே | நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல் உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும், தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் நின்று, ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல், மாயையில் மயங்கி அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள். |
காய பரத்தில் அலைந்து துரியத்து\nசாய விரிந்து குவிந்து சகலத்தில்\nஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்கு\nதூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே | உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையை சார்ந்து வாழ்ந்து மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும், ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து திரிகின்ற அடியவர்களுக்கு, மாயை இல்லாத தூய்மையான அருளை தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்து சொல்வது? |
உணர்வு உடையார்களுக்கு உலகமும் தோன்றும்\nஉணர்வு உடையார்களுக்கு உறு துயர் இல்லை\nஉணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்\nஉணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே | உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தை பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும். அவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை. அவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து தரிசிப்பார்கள். |
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி\nநெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன்\nபறிக்கின்ற காயத்தை பற்றியே நேர்மை\nபிறிக்க அறியாதார் பேயோடு ஒப்பரே | ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட உடலும், உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும், ஒன்றாக சேர்ந்து வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட மூச்சுக்காற்றும், அந்த மூச்சுக்காற்றை நிலையாகக் கொண்டு வாழ்கின்ற உயிரும், ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற உடலை சார்ந்து தாம் வாழ்ந்தாலும் இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை, உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள், ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப் போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள். |
கொண்டான் அடி என் அடி கை குறி தன்னை\nகொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை\nகொண்டான் மலம் முற்றும் தந்த அவன் கோடல் ஆல்\nகொண்டான் என ஒன்றும் கூடி நில்லானே | எம்மை ஆட்கொண்ட இறைவன் தமது திருவடி கருணையால் உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை கடை பிடிக்கும் வழியில் செல்ல வைத்து, தமது திருக்கையினால் அபயம் என்கிற அருள் குறியைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருளினான். அதன் பிறகு எமது உயிர், எமக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி, எமது உடல், ஆகிய மூன்றும் சேர்ந்து இருக்கின்ற கூட்டத்தை தனதாக ஏற்றுக் கொண்டு, எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும் முழுவதுமாக நீக்கி வீட்டு அவற்றை தந்த அவனே மீண்டும் எடுத்துக் கொள்வதின் மூலம் எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான் என்றாலும் எதனுடனும் கூடி இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான். |
கூடும் உடல் பொருள் ஆவி குறி கொண்டு\nநாடி அருள் வைத்த அருள் ஞான சத்தி ஆல்\nபாடல் உடலினில் பற்று அற நீக்கியே\nகூடிய தான் அவன் ஆக குறி கொண்டே | உயிர்களின் உடல், அதற்குள் மறைந்து இருக்கின்ற பொருளாகிய இறைவன், அந்த இறைவனின் சிறு பகுதியாகிய ஆன்மா, ஆகிய மூன்றும் ஒன்றாக சேர்ந்து இருப்பதை உணர்ந்து கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு, உயிர்கள் தம்மை தேடி வர வேண்டும் என்கின்ற மாபெரும் கருணையினால் தமது அருளை அவர்களுக்குள் வைத்து அருளுகின்றான் அறிவு வடிவாகிய இறைவன். அந்த இறைவனின் ஞான சக்தியானது இறைவனை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால் எப்போதும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்துக் கொண்டு தமக்கான செயல்களை செய்கின்ற உயிர்களின் உடலில் சேர்ந்து இருக்கின்ற ஆசைகள் பற்றுக்கள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக நீக்கி விட்டு, அந்த உயிர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து, அவர்கள் தாமே இறைவனாக இருக்கின்ற நிலையையே குறிக்கோளாக கொண்டு இருக்க வைக்கின்றான். |
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்\nஇருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்\nபிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்\nகரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே | உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற பல விதமான உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனின் தன்மைகள் எதையும் உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது, இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற மாயையாகிய ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை அறுத்து, அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் தமக்குள்ளேயே சேர்த்துக் கொண்டு அருளுகின்ற இறைவனை யாம் கண்டு கொண்டோம். |
பிட்டி அடித்து பிதற்றி திரிவேனை\nஒட்டு அடித்து உள் அமர் மாசு எல்லாம் வாங்கி பின்\nதட்டு ஒக்கா மாற்றினன் தன்னையும் என்னையும்\nவட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்த அதே | அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை செய்து கொண்டு, தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு, வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மிடமுள்ள தூசுகளை நீக்கி, எமக்குள்ளே வீற்றிருக்கின்ற அழுக்குகளை அனைத்தையும் தாமே வாங்கிக் கொண்டு அருளினான் இறைவன். பிறகு, குற்றத்தை சேர்ந்து இருக்காத தூய்மையாக எம்மை மாற்றி அருளிய இறைவனையும் எம்மையும் ஒரே வட்டமாகிய தன்மைக்குள் ஒன்றாக சேர்ந்து இருப்பதாகிய நிலைக்கு கொண்டு வந்து, தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து, அதன் பயனால் முக்தியை கொடுத்து எமக்கு அருளுகின்றான் இறைவன். |
பச்சிமம் திக்கிலே வைத்த ஆசாரியன்\nநிச்சலும் என்னை நினை என்ற அப் பொருள்\nஉச்சிக்கு கீழ் அது உள் நாவுக்கு மேல் அது\nவைத்த பதம் இது வாய் திறவாதே | மேல் திசையிலே இறையருளால் வைக்கப் பட்ட குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது தினமும் தன்னை நினைத்துக் கொண்டே இரு என்று அருளிய அந்த பரம்பொருளின் வடிவமானது உச்சந் தலைக்கு கீழ் உள்ள இடத்திலும், வாய்க்கு உள்ளே இருக்கின்ற அண்ணாக்குக்கு மேலே உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில் இறையருளால் வைக்கப் பட்ட திருவடிகளாக இருக்கின்றது. வாய் திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும். |
உயிர் ஆம் சரீரமும் ஒண் பொருள் ஆன\nவியவு ஆர் பரமும் பின் மேவும் பிராணன்\nசெயல் ஆர் சிவமும் சித் சத்தி ஆதிக்கே\nஉயல் ஆர் குரு பரன் உய்ய கொண்டானே | உயிரோடு இருக்கின்ற உடலும், அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவும், அனைத்திலும் உயர்ந்து முழுவதுமாக இருக்கின்ற பரம்பொருளும், உடல் எடுத்த பிறகு வந்து சேர்ந்து கொள்ளுகின்ற மூச்சுக்காற்றும், ஆகிய இவை அனைத்தின் செயல்களிலும் முழுவதுமாக இருக்கின்ற இறைவனும் ஞானமாக இருக்கின்ற இறைவியுமே ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள் என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம் முழுமையாக இருக்கின்ற குருவாகிய பரம்பொருள் அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு ஆட்கொண்டு அருளுவார். |
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு\nபடர் வினை பற்று அற பார்த்து கை வைத்து\nநொடியில் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கி\nகடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே | உடல், அதற்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக் கொண்டு வரும் படி செய்து, அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும் படி தமது திருக்கண்ணால் பார்த்து (நயன தீட்சை), தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து (ஸ்பரிச தீட்சை), ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்து (திருவடி தீட்சை), அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை (ஞான தீட்சை) ஆக்கிக் கொடுத்து, துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற பிறவி சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியை காட்டி அருளினான் உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன். |
மேவி எழுகின்ற செம் சுடர் ஊடு சென்று\nஆவி எழும் அளவு அன்றே உடல் உற\nமேவ படுவதும் விட்டு நிகழ்வதும்\nபாவித்து அடக்கில் பர கெதி தானே | அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து எழுகின்ற சிகப்பான சுடராகிய பேரொளியை ஊடுருவிச் சென்று, ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து எழுந்து, அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப அப்போதே அவற்றுக்கு ஏற்ற உடலை தமது அருளால் உருவாக்கி கொடுத்து, அதற்குள் பொருந்தி இருந்து செயல் படுவதும், அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின் தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து, தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால், அனைத்திற்கும் மேலான இறை நிலையை தாமும் அடைய முடியும். |
மலர்ந்த அயன் மாலும் உருத்திரன் மகேசன்\nபலந்து எழும் ஐம் முகன் பர விந்து நாதம்\nநலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி\nபலம் தரும் இலிங்கம் பரா நந்தி ஆமே | அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தி எனும் பரம்பொருளே சிவ இலிங்க வடிவமாக இருந்து தனது பேரருளால் வெளிச்சத்தின் வடிவமாகிய இறைவி, சத்தத்தின் வடிவமாகிய இறைவன், அவர்களுக்கு கீழே ஐந்து விதமான தொழில்களை புரிகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களாகவும் இருந்து அனைவருக்கும் சக்தி கொடுத்து வழி நடத்துகின்ற குருநாதனாகவும் இருக்கின்றான். |
ஒன்று என கண்டேன் எம் ஈசன் ஒருவனை\nநன்று என்று அடி இணை நான் அவனை தொழ\nவென்று ஐம் புலனும் மிக கிடந்து இன்பு உற\nஅன்று என்று அருள் செய்யும் ஆதி பிரானே | ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே அவை அனைத்தும் நன்மையானது என்றும் இறைவனின் திருவடிகளுக்கு சரிசமமானது என்றும் யாம் அறிந்து கொண்டு, அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு வணங்கினோம். அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும் படி அப்பொழுதில் இருந்து என்றும் அருள் செய்கின்றான் ஆதி மூல தலைவனாகிய இறைவன். |
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு\nநிரைத்து வரும் கங்கை நீர் மலர் ஏந்தி\nஉரைத்த அவன் நாமம் உணர வல்லார்க்கு\nபுரைத்து எங்கும் போகான் புரி சடையோனே | பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும் அவை அனைத்தையும் தாண்டியும் அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாக பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக் கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனை தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, எங்கும் பொய்த்து போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான் கயிறு போல் திரிந்த சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன். |
குரைக்கின்ற ஆறில் குவலைய நீரும்\nபரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்\nநிரைக்கின்ற ஆறு இவை நீண்டு அகன்ற ஆனை\nவரைத்து வலம் செய்யும் ஆறு அறியேனே | சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின் வழியில் உலகமும் [நிலம்], உலகத்தில் இருக்கின்ற நீரும், அலைந்து திரிகின்ற காற்றும், பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற நெருப்பும், இப்படி ஐந்து பூதங்களின் கூட்டமாக இருக்கின்ற வழியில் அனைத்திலும் நீண்டு விரிந்தும், இவை அனைத்தையும் தாண்டியும் இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து அவனை வணங்குவதற்கான வழியை யாம் அறியாமல் இருக்கின்றோம். |
சத்தி சிவன் தன் விளையாட்டு தாரணி\nசத்தி சிவமும் ஆம் சிவம் சத்தி ஆகும்\nசத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை\nசத்தி தான் ஒன்றும் சமைந்து உரு ஆகுமே | இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள், இறைவனாவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதை பரிபூரணமாக உணர்ந்து கொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும். |
சத்தி சிவன் விளையாட்டு ஆம் உயிர் ஆக்கி\nஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி\nசுத்தம் அது ஆகும் துரியம் பிறிவித்து\nசித்தம் மகிழ்ந்து சிவம் அகம் ஆக்குமே | இறைவியும் இறைவனும் தாங்கள் ஆடுகின்ற திருவிளையாட்டின் மூலம் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து, ஒன்றாக இருக்கின்ற சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான மாயைகளின் கூட்டத்திற்கு நடுவில் பந்த பாசங்களால் அந்த உயிர்களை பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள். அந்த உயிர்களில் தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம் செய்து, அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும் அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு, அந்த உயிரின் சித்தத்தை பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து, சிவமாகவே அந்த உயிரின் உள்ளத்தை ஞான இலிங்கமாக்கி விடுவார்கள். |
கொழுந்தினை காணில் குவலையம் தோன்றும்\nஎழுந்த தடம் காணில் இருக்கலும் ஆகும்\nபரந்த தடம் காணில் பரா பதி மேலே\nதிரண்டு எழ கண்டவர் சிந்தை உள் ஆனே | தமக்குள்ளிருந்து ஞானமாக வெளிப்படுகின்ற இறைவனின் ஆரம்ப நிலையை தரிசிக்கும் சாதகர்களுக்கு உலகங்கள் அனைத்திலும் சூட்சுமமாக அவன் கலந்து இருப்பது தெரியும். அவன் தமக்குள்ளிருந்து எழுந்து வந்த சுவடை கண்டு உணர்ந்தால் அதன் மூலம் அவனை அடைந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருப்பதும் முடியும். தமக்குள்ளிருந்து தோன்றிய இறைவனே அனைத்து உலகங்களுக்கும் பரவி இருக்கின்ற சுவடை கண்டு உணர்ந்தால் பராசக்தியின் தலைவனாக அனைத்திற்கும் மேலே அவன் வீற்றிருப்பதை உணரலாம். அப்படி அனைத்திலும் கலந்து நிற்கின்ற இறைவன் ஒன்றாக திரண்டு எழுந்து நிற்பதை கண்டு உணர்ந்த சாதகர்களின் அறிவுக்கு உள்ளே அவன் எப்போதும் ஞான இலிங்கமாக வீற்றிருப்பான். |
சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே\nசுத்த சிவ பதம் தோயாத தூ வெளி\nஅத்தன் திரு அடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம்\nஒத்தயும் ஆம் ஈசன் தான் ஆனது உண்மையே | உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்ற இறை சக்திக்கும் மேலே அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டு இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவிக்கு உள்ளே சரிபாதியாக நிற்கின்ற ஒரு குற்றமும் குறையும் இல்லாத தூய்மையான சிவப் பரம்பொருளின் திருவடியானது, எதிலும் குறைவில்லாததும் எதனாலும் பாதிக்கப் படாததுமாகிய தூய்மையான பரவெளியில் வீற்றிருக்கின்றது. அப்படி இருக்கின்ற அனைத்திற்கும் தந்தையாகிய இறைவனின் திரு அடிகளானது அண்ட சராசரங்களையும் தாண்டி பரவெளியையும் தாண்டி இருக்கின்ற எல்லையில்லா இடத்தில் தனித்தும் இருக்கின்றான் எப்பொருளுக்கும் தலைவனாகிய இறைவன். அவன் தானே அனைத்துமாக இருப்பது உண்மையே ஆகும். |
ஆதி பர தெய்வம் அண்டத்து நல் தெய்வம்\nசோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்\nநீதி உள் மா தெய்வம் நின் மலன் எம் இறை\nபாதி உள் மன்னும் பரா சத்தி ஆமே | ஆதியிலிருந்தே இருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன், அண்டங்களுக்கு எல்லாம் நன்மை செய்கின்ற இறைவன், தமக்குள் சோதி வடிவாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொண்ட அடியவர்களை எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற மாபெரும் இறைவன், தர்மங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக இருக்கின்ற மாபெரும் இறைவன், இப்படி எந்தவிதமான குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான எமது இறைவன் தனது திருமேனியில் சரிபாதியாக உள்ளே எப்போதும் நிலைபெற்று சேர்ந்தே இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவியோடு ஞான இலிங்கமாக இருக்கின்றான். |
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற\nஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற\nகாண் தகை ஆன் ஓடும் கன்னி உணரினும்\nஊண் தகை மாறினும் ஒன்று அது ஆமே | எனது வினைகள் அனைத்தும் நீங்கி அழிந்து விடும் படி இறைவனை வேண்டி நின்று வணங்கினேன். ஆண்டுகள் ஒவ்வொன்றையும் மாதங்கள், நாட்கள் என்று இருக்கின்ற உயிர்களின் வாழ் நாளை அளந்து அருளுபவனை கண்டு தரிசிக்கும் இயல்போடு இருக்கின்ற நாயகனாகிய இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற என்றும் இளமையான இறைவியையும் உணர்ந்து தொழுதாலும், தமது உடலின் இயல்பை கடினமான சாதகங்களால் மாற்றி யோகத்தின் மூலம் உணர்ந்தாலும், இரண்டுமே ஒன்றான ஞான இலிங்கத்தின் வழியாகவே இருக்கின்றது. |
தேவர் பிரானை திசை முக நாதனை\nநால்வர் பிரானை நடு உற்ற நந்தியை\nஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ் வழி\nஆவர் பிரான் அடி அண்ணலும் ஆமே | தேவர்களுக்கெல்லாம் தலைவன், பத்து திசைகளையும் தனது திருமுகங்களாக கொண்ட தலைவன், பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் தலைவன், அருவமாகிய மேலுக்கும் உருவமாகிய கீழுக்கும் நடுவில் வீற்றிருக்கின்ற குருநாதனாகிய இறைவன், எவருக்கும் தலைவன் என்றெல்லாம் போற்றி வழிபடுகின்ற அடியவர்களின் நெறி முறையை பின்பற்றி தாமும் அப்படியே வழிபடுகின்ற அடியவர்களது தலைவனாகவும், தமது திருவடியை அருளி அடியவர்க்கும் அடியவனாகவும், அவர்களை காத்து அருளுபவனாக ஞான இலிங்க வடிவான இறைவன் இருக்கின்றான். |
நால் ஆன கீழ் அது உருவம் நடு நிற்க\nமேல் ஆன நான்கும் அருவம் மிகு நா பண்\nநூல் ஆன ஒன்று அரு உரு நண்ணல் ஆல்\nபால் ஆம் இவை யாவும் பர சிவன் தானே | உருவமாக கீழே இருக்கின்ற பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களாகவும், அருவுருவமாக நடுவில் இருக்கின்ற சதாசிவமூர்த்தியாகவும், அருவமாக மேலே இருக்கின்ற சத்தம் [நாதம்], வெளிச்சம் [விந்து], சக்தி, சிவம் ஆகிய நான்கு சக்திகளாகவும், இவை அனைத்தும் மிகுந்து இருக்கின்ற நான்கு விதமான மந்திரங்களால் பாடப் பெற்ற ரிக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு நூல்களாகிய வேதங்களின் மூலப் பொருளாகவும் இருந்து அருவங்களாகவும், உருவங்களாகவும், அருவுருவங்களாகவும், இவற்றை சார்ந்து இருக்கின்ற அனைத்துமாகவும் அருளுவது பரம்பொருளாகிய சிவம் ஒன்றே ஆகும். |
உருவும் அருவும் அருவோடு உருவும்\nஅருவும் பர சிவன் மன் பல் உயிர்க்கு\nகுருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்\nதரு என நல்கும் சதா சிவன் தானே | அருவமாக இருக்கின்ற பரம்பொருளாகிய சிவமே உருவமாகவும், உருவமில்லாத அருவமாகவும், அருவத்தோடு நிற்கின்ற உருவமாகவும் [அருவுருவம் / இலிங்க வடிவம்], உலகத்தில் உள்ள பல விதமான உயிர்களில் தம்மை அடைவதையே கொள்கையாக கொண்ட அடியவர்களுக்கு உள்ளுக்குள் குருவுமாகவும் நின்று கற்பகத் தரு போல அவர்கள் வேண்டிய அனைத்தையும் கொடுத்து அருளுகின்றான். அவனே சதா சிவப் பரம்பொருள் ஆகும். |
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்றும்\nசென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள்\nஎன்று நின்று ஏத்துவர் எம் பெருமான் தன்னை\nஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே | ஆத்ம இலிங்க வடிவத்தில் அடி முடி காண முடியாத அண்ணாமலையாக அன்று நின்றான் இறைவன். ஐந்து பூதங்களுடன் சேர்ந்தே கிடந்தான் இறைவன். அவனே எல்லா காலத்திலும் உலகமெங்கும் சென்று அனைத்தையும் இயங்குவதையும் செய்து எட்டு திசைகளிலும் கலந்து நிற்கின்றான், அவனை போற்றி வணங்குகின்ற தேவர்களும் அனைத்திலும் நின்று கிடந்து இயக்குகின்றான் இறைவன் என்று எமது தலைவனாகிய இறைவனை தாங்களும் நின்று போற்றி வணங்குவார்கள். அவன் எம்மோடு கலந்து நின்று எமது உள்ளத்திற்கு உள்ளே வீற்றிருந்தான். |
பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகர்\nகுரான் என்றும் என் மனம் கோயில் கொண்டு ஈசன்\nஅரா நின்ற செம் சடை அங்கியும் நீரும்\nபொரா நின்று அவர் செய்ய புண்ணியன் தானே | தனக்குள் தலைவனாக இருந்து செயல் பட வைக்கின்றவன் இறைவன் இல்லை என்று உலகத்தவர்கள் யாராவது சொன்னால் அவர்கள் அறிவில்லாதவர்களே. ஏன் என்றால் அனைவருக்கும் உள்ளுக்குள் இருந்து ஓதுபவனாகிய இறைவன் அடியவரது மனதையே கோயிலாக கொண்டு தலையில் பாம்பை அணிந்த சடையுடன் கையில் நெருப்பும் நீரும் ஏந்திக் கொண்டு நிற்கின்றான். அவன் அடியவரை நன்மைகள் செய்ய வைத்து அதன் புண்ணியங்களை தானே ஏற்றுக் கொள்கின்றான். |
பராபரன் எந்தை பனி மதி சூடி\nதராபரன் தன் அடியார் மனம் கோயில்\nசிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்\nஅராமரன் மன்னி மனத்து உறைந்தானே | அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும், எமது தந்தையானவனும், தன் தலையில் குளிர்ச்சியான நிலவை சூடிக் கொண்டு இருப்பவனும், உலகங்களுக்கு எல்லாம் தலைவனாவனும், தமது அடியார்களின் மனதையே தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருப்பவனும், தேவர்களுக்கும் மேலான தேவனும், விண்ணுலக தேவர்களின் தலையில் நிலை பெற்று வீற்றிருப்பவனும், உருவமில்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன் எமக்குள் நிலை பெற்று எமது மனதிற்குள் எப்போதும் வீற்றிருந்தான். |
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்கை\nமனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது\nநலம் புகுந்து என்னோடு நாதனை நாமே\nநிலம் புகுந்த ஆதியும் மேல் கொண்ட ஆறே | அனைத்திற்கும் மேலான பரம்பொருளாக தமது ஆத்ம இலிங்கமே இருக்கின்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவர்களின் மனதிற்குள் இறைவன் புகுந்து, அவர்களின் உயிரோடு பொருந்தி, வாழ்க்கையில் எப்போதும் உடன் இருந்து, அனைத்து விதமான இன்பங்களையும் வாரி வழங்கும் போது, நலங்களெல்லாம் அவர்களுக்குள் புகுந்து, அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனோடு ஒன்றாக கலந்திருந்து, உலகத்தில் புகுந்து வீற்றிருக்கும் ஆதி பரம்பொருள் அவர்களின் ஆன்மாவை மேன்மை படுத்தி ஆட்கொண்டு அருளி நன்மையின் வழியில் நடத்துகின்றான். |
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆத்துமா\nசத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்\nசத்தி நல் இலிங்கம் தகும் சிவ தத்துவம்\nசத்தி நல் ஆத்துமா சதா சிவம் தானே | ஆத்ம இலிங்கத்திற்கு உள்ளிருந்து ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது நன்மையான ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி நன்மையைக் கொடுத்து செயல் படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி செயல் படுகின்ற ஞான தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி செயல் படுகின்ற சிவ தத்துவமாக இருக்கின்றது. இப்படி ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது நன்மையை கொடுக்கின்ற ஆத்ம இலிங்கமே அனைத்திற்கும மேலான பரம்பொருளாக தானே இருக்கின்றது. |
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம்\nவிந்து அதே பீடம் நாதம் இலிங்கம் ஆம்\nஅந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய்\nவந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே | அந்த (அந்த வெளிச்சம் சத்தம் ஆகிய) இரண்டையும் (இரண்டையும்) ஆதார (ஆதாரமாகக் கொண்டு) தெய்வம் (வீற்றிருக்கின்ற தெய்வம் [தொழில் காரணர்கள்]) ஆய் (ஆக) |
தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்\nபான் நேர் எழுகின்ற ஐம்பதம் வந்திடில்\nபூ நேர் எழுகின்ற பொற் கொடி தன்னுடன்\nதானே எழுந்த அகாரம் அது ஆமே | தமக்குள் இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து நேராக எழுந்து மேலே வருகின்ற ஜோதியை தாமாகவே இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்து கொண்டவர்கள் காணலாம். அப்போது அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்ப சரிசமமாக எழுந்து இருக்கின்ற இறைவனின் ஐந்து பூதங்கள் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மற்றும் நிலம்) தமக்குள்ளும் இருக்கின்றது என்கின்ற உணர்வு வந்து விட்டால், சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் சுழுமுனை நாடிக்கு நேராக எழுகின்ற பொன் போல பிரகாசிக்கும் கொடியாக வீற்றிருக்கும் இறைவியுடன் தாமாகவே எப்போதும் சேர்ந்தே எழுந்தருளும் இறைவனை உணரலாம். ஓங்காரத்தில் ‘அ’கார எழுத்தாக இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் இதுவே ஆகும். |
சத்தி சிவம் ஆம் இலிங்கமே தாபரம்\nசத்தி சிவம் ஆம் இலிங்கமே சங்கமம்\nசத்தி சிவம் ஆம் இலிங்கம் சதாசிவம்\nசத்தி சிவம் ஆகும் தற்பரம் தானே | எப்போதும் பிரியாமல் இருக்கின்ற இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கமே உடலாக இருக்கின்றது. இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தில் உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றது. இப்படி மூன்றும் கலந்து பிண்டத்தில் இருக்கின்ற ஆத்ம இலிங்கமே அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது. இப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கின்ற ஆத்ம இலிங்கமானது தானாகவே அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்றது. |
ஆதார மா தெய்வம் ஆகின்ற விந்துவும்\nமேத ஆதி நாதமும் மீதே விரிந்தன\nஆதார விந்து அதி பீட நாதமே\nபோதா இலிங்க புணர்ச்சி அது ஆமே | அனைத்திற்கும் ஆதாரமாகிய மாபெரும் தெய்வமாக இருக்கின்ற விந்து (வெளிச்சம்) சக்தியும் அதற்கு மேலாக ஆதியிலிருந்தே இருக்கின்ற நாத (சத்தம்) சக்தியும் ஒன்றன் மீது ஒன்றாகவே அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றது. இதில் ஆதாரமாகிய விந்து சக்திக்கு மேன்மை தருகின்ற பீடமே நாத சக்தியாகும். எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகள் இலிங்க வடிவத்தில் கலந்து இருக்கின்ற நிலையே ஆத்ம இலிங்கமாகும். |
அகாரம் முதல் ஆய் அனைத்தும் ஆய் நிற்கும்\nஉகாரம் முதல் ஆய் உயிர்ப்பு எய்து நிற்கும்\nஅகாரம் உகாரம் இரண்டும் அறியில்\nஅகாரம் உகாரம் இலிங்கம் அது ஆமே | ஓங்கார தத்துவத்தில் ‘அ’கார எழுத்தின் முதலாகி அனைத்துமாக நிற்பதுவும், ‘உ’கார எழுத்தின் முதலாகி அனைத்து உயிர்களின் இயக்கமாக நிற்பதுவும், ‘அ’கார எழுத்தின் தத்துவம் ‘உ’கார எழுத்தின் தத்துவம் ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை உள்ளுக்குள் உணர்ந்து அறிந்து கொண்டால், அந்த ‘அ’கார எழுத்தும் ‘உ’கார எழுத்துமாக தமக்குள் இருக்கின்ற பரம்பொருளின் இலிங்க வடிவமே ஆத்மாவாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். |
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்\nஇலிங்கம் நல் கண்டம் நிறையும் அகாரம்\nஇலிங்கத்து வட்டம் உறையும் உகாரம்\nஇலிங்க உகாரம் நிறை விந்து நாதமே | அரூபமாக இருக்கின்ற சதாசிவ மூர்த்தியின் இலிங்க வடிவத்தில் நன்மை தருகின்ற பீடப் பகுதியானது அனைத்தோடும் சேர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஓங்காரத்தின் தத்துவமாகும். அதில் நடுவில் இருக்கின்ற பாணமானது அனைத்திலும் பரவி நிறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘அ’கார எழுத்தின் தத்துவமாகும். அதில் இருக்கின்ற வட்டமானது அனைத்திற்கு உள்ளும் உறைந்து இருக்கின்ற ஓங்காரத்தின் ‘உ’கார எழுத்தின் தத்துவமாகும். இலிங்க வடிவத்தில் ‘உ’கார எழுத்தாக நிறைந்து இருப்பதுவே வெளிச்சமும் சத்தமுமாகிய பரம்பொருளின் விந்து நாத தத்துவமாகும். |
ஆரும் அறியார் அகாரம் அது ஆவது\nபாரும் உகாரம் பகுந்து இட்ட நாடில் அத்\nதாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்\nமாறி எழுந்திடும் ஓசை அது ஆமே | சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும் அருளாக இருப்பது எது என்று அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியை தமக்குள் தேடி உணர்ந்தால் அது பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும், வெளியிலும் இறை சக்தியாகவும், என்று இரண்டுமாக உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்பதாய் தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும். |
தன் மேனி தான் சிவ இலிங்கம் ஆய் நின்றிடும்\nதன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும்\nதன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம்\nதன் மேனியில் தான் ஆகும் தற் பரம் தானே | அண்ட சராசரங்களாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற நடராஜ தத்துவத்தை தமக்குள்ளே உணர்ந்து கொண்ட அடியவரின் உடலானது தானே சிவ இலிங்கமாக நிற்கும். அடியவர் தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும் சதாசிவப் பரம் பொருளாகவே நிற்பார். அடியவர் தனது உடலே சிவனாகவும், தன்னுடைய உடலுக்குள்ளேயே சிவ பேரின்பமாகவும் ஆகி விடுவார். இவ்வாறு அடியவரின் உடல் தானே ஆகி நிற்பது தானாகவே எப்போதும் இருக்கின்ற பரம்பொருள் ஆகும். |
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட\nதாங்கிடும் ஈர் ஏழும் தான் நடு வான் அதில்\nஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என\nஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே | தமக்குள்ளிருந்து நாத வடிவாக வெளிப்படுகின்ற நடராஜ வடிவ தத்துவமானது, அண்ட சராசரங்கள் அதற்கும் மேல் அதற்கும் கீழ் என்று மூன்று இடங்களிலும் முழுவதுமாக நிறைந்து நிற்கின்ற மாபெரும் தீயாகவும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்கிக் கொண்டும், அனைத்திற்கும் நடுவாகிய ஆகாய தத்துவமாகவும், அனைத்தையும் தாண்டி ஓங்கி விளங்குவதாகவும், அனைத்திற்கும் ஆதியாகவும், அனைத்திற்கும் முடிவாகவும், இப்படி இங்கு உள்ள அனைத்தையும் தம் உடலுக்குள்ளே கொண்டு சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும் இருக்கின்றது. |
உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானை\nகொணர்ந்தேன் குவலையம் கோயில் என் நெஞ்சம்\nபுணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே\nபணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே | உலகமெங்கும் உள்ள அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற மாபெரும் பொருளாகிய இறைவனை எமக்குள்ளே உணர்ந்தேன். உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கும் கோயிலாக எமது நெஞ்சத்துக்குள்ளே அவனை கொண்டு வந்தேன். அவ்வாறு எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனோடு ஒன்றாக கலந்து விட்டேன். இது பொய் இல்லை உண்மையே ஆகும். எமக்குள்ளிருந்தே அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை பணிந்து தொழுதேன். அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும் ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான். |
ஒன்றிய ஆறும் உடலின் உடன் கிடந்து\nஎன்றும் எம் ஈசன் அடக்கும் இயல்பு அது\nதென் தலை தேற திருந்தும் சிவன் அடி\nநின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே | இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற ஆறு சக்கரங்களும் உடலோடு சேர்ந்து கிடந்து எப்போதும் எம்பெருமான் இறைவன் தமக்குள் அடங்கி இருக்கின்ற இயல்பான தன்மையாகிவிடும். அதன் பிறகு அழகிய தலையில் உடையவனாகிய இறைவனை தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற இறைவனின் திருவடியை நின்று வணங்கித் தொழுதேன் எமது நெஞ்சத்தின் உள்ளே. |
மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும்\nதான் நந்தி அஞ்சின் தனி சுடர் ஆய் நிற்கும்\nகால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்\nமேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே | மாபெரும் குருநாதராகிய இறைவனை எத்தனை காலங்காலமாக வேண்டி தொழுதாலும் தமக்குள்ளே இருக்கின்ற குருநாதராகிய இறைவன் ஒளிமயமாகிய வடிவத்தில் தனி சுடராகவே நின்று வெளிப்படுவார். மூச்சுக்காற்றை குருநாதர் காட்டிய வழியில் வயிற்றைக் கடந்து மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மூலாக்கினியை எழுப்பி, சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி கொண்டு சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் கொண்டு சேர்த்து, அதற்கு மேல் ஜோதியாக வீற்றிருக்கும் குருநாதராகிய இறைவனுடன் சகஸ்ரதளத்தை தாண்டி எட்டாவது துவாத சாந்த வெளியும், அதையும் தாண்டிய ஒன்பதாவது பர வெளியாகிய சந்திர மண்டலம் வரை சென்று, இந்த ஒன்பது சக்கரங்களிலும் முழுவதுமாக அவர் நிறைந்து நிற்பதுவே சதாசிவ இலிங்கமாகும். |
சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும்\nசத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும்\nசத்தி நால் வட்டம் சலம் உற்று இருந்திடும்\nசத்தி உரு ஆம் சதா சிவம் தானே | மூன்று சக்திகளின் வடிவானது இலிங்க வடிவத்தில் அமையும் போது நான்கு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் தண்ணீர் போல தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும் ஞான சக்தியாக நின்றிடும். ஆறு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் சயன நிலையில் படுத்து கிடக்கும் இச்சா சக்தியாக வீற்றிருக்கும். நான்கு வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் மேக நீரைப் போல சுழன்று கொண்டே இருக்கின்ற கிரியா சக்தியாக இருந்திடும். இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின் இலிங்க வடிவங்களாக இருப்பது சதா சிவமூர்த்தி ஆகும். |
எண்ணில் இதையம் இறை ஞான சத்தி ஆம்\nவிண்ணில் பரம் சிரம் மிக்க சிகை ஆகி\nவண்ண கவசம் வனப்பு உடை இச்சை ஆம்\nபண்ணும் கிரிகை பர நேத்திரத்திலே | இறைவனின் மூன்று விதமான சக்திகளானது எப்படி இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் இதயமானது இறைவனின் ஞான சக்தியாக இருக்கின்றது. இறைவனின் தலையும் அதன் மேலுள்ள திருமுடியும் பல வண்ணங்களுள்ள கவசமும் செழுமையான உடையும் இச்சா சக்தியாக இருக்கின்றது. இறைவனின் திருவருள் கண்களே கிரியா சக்தியாக இருக்கின்றது. |
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்\nவஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்\nசெம் உறு செம் சுடர்கே சரி மின் ஆகும்\nசெம் சுடர் போலும் தெசு ஆயுதம் தானே | இறைவனின் ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை ஒரு தீமையும் இல்லாத ஒளி உருவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றின் பச்சை நிறம் பசுமையாக நன்மையை அருளுவதை குறிப்பது ஆகும். இறைவனின் செழுமை உற்று இருக்கும் சிகப்பான திருமேனியாகிய சுடர் ஒளிக்கு சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி உருவம் ஆகும். சிகப்பான சுடர் போல பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள் தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றது. |
நாணு நல் ஈசானம் நடு உச்சி தான் ஆகும்\nதாணுவின் தன் முகம் தற்புருடம் ஆகும்\nகாணும் அகோரம் இருதையம் குய்யம் ஆம்\nவாண் உறு வாமம் ஆம் சத்தி நல் பாதமே | இறைவனின் ஐந்து திருமுகங்களோடு இறைவி சென்று சேரும்போது அறிவு வடிவமாக இருக்கின்ற இறைவனின் ஈசான முகம் இறைவியின் தலை உச்சியாகவும், முக்தியாகிய நிலை பேற்றைக் கொடுக்கின்ற இறைவனது தற்புருட முகம் இறைவியின் திருமுகமாகவும், கண்களால் அருளைக் கொடுக்கின்ற இறைவனின் அகோர முகம் இறைவியின் இருதயமாகவும், அமிழ்தம் பெற்று மேல் நிலையைக் கொடுக்கின்ற இறைவனின் வாமதேவ முகம் இறைவியின் கீழ் பகுதியாகவும், நன்மையைக் கொடுக்கின்ற இறைவனின் சத்தியோசாத முகம் இறைவியின் திருவடிகளாகவும் விளங்கும். |
சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில்\nஉத்தரம் வாமம் உரை அற்று இருந்திடும்\nதத்துவம் புரவி தற்புருடன் சீரம்\nஅத்த அகோரம் மகுடத்து ஈசானனே | ஆதியிலிருந்தே தானாக இருக்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின் ஐந்து விதமான திருமுகங்களோடு அசையும் சக்தியாகிய இறைவி சேர்ந்து விட்டால் வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவ திருமுகம் அமைதியாகி இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும். மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாத திருமுகம் குதிரையின் ஓட்டம் போல இயங்கும். கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருட திருமுகம் சிகப்பான இரத்த ஓட்டம் போல இயங்கும். தெற்கு நோக்கி இருக்கின்ற அகோர திருமுகத்தில் இறைவனும் இறைவியும் சரிபாதியாக இருப்பார்கள். நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசான திருமுகத்தில் இறைவனும் இறைவியும் இணைந்து மகுடம் போல உயர்ந்து இருப்பார்கள். |
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்\nசுருள் ஆர்ந்த செம் சடை சோதி பிறையும்\nஅருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை\nதெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே | ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை நிறைந்த திருக்கழுத்தும், திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற பாசங்களை அறுக்கின்ற மழுவும், சுருள் நிறைந்த செம்மையான சடையும், அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும் பிறை நிலாவும் அருள் நிறைந்த சிந்தையும் கொண்டு விளங்குகின்ற எமது ஆதிப் பரம்பொருளாகிய இறைவனை தெளிவான அறிவினால் ஆராய்ந்து எனக்கு உள்ளே தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன். |
கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை\nவேறு ஓரை செய்து மிகை பொருள் ஆய் நிற்கும்\nஏறுகை செய் தொழில் வானவர் தம்மோடு\nமாறு செய்வான் என் மனம் புகுந்தானே | எடுத்துக் கூறினால் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற சதா சிவப் பரம்பொருளே எமது இறைவனாகும். அவனே வேறு வேறு விதங்களில் பல விதமாக திருவிளையாடல்கள் செய்து அனைத்திற்கும் மேலான பொருளாகவும் நிற்கின்றான். உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு சென்று உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற வானவர்கள் அனைவரோடும் சேர்ந்து இருந்து தீயவற்றை மாற்றி நன்மையை அருளுவதை செய்கின்றான் எமது மனதில் புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன். |
தத்துவம் ஆவது அருவம் சராசரம்\nதத்துவம் ஆவது உருவம் சுகோதையம்\nதத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்\nதத்துவம் ஆகும் சதா சிவம் தானே | உருவம் இல்லாமல் அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பதும், உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் இருப்பதே முப்பத்தாறு தத்துவங்களாகும். இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும். |
சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்\nசத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்\nசத்தி உருவம் அருவம் சதா சிவம்\nசத்தி சிவம் தத்துவம் முப்பத்து ஆறே | சக்தி பூமியாகிய நிலத்திலும் சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்தில் இருக்கின்றார்கள். சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாக சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள். சக்தி உருவமாகவும் சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள். சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள். |
அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள\nஅஞ்சினோடு ஐந்து கரதலம் தான் உள\nஅஞ்சினோடு ஐஞ்சு ஆயுதம் உள நம்பி என்\nநெஞ்சு உள் புகுந்து நிறைந்து நின்றானே | சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளது. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளது. அவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளது. அந்த பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக உள்ளது. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான். |
நடுவு கிழக்கு தெற்கு உத்தர மேற்கு\nநடுவு படிக நல் குங்கும வன்னம்\nஅடைவு உள அஞ்சனம் செவ் அரத்தம் பால்\nஅடியற்கு அருளிய முகம் இவை ஐந்தே | தம்மை வணங்கும் அடியவர்களுக்காக இறைவன் அருளிய திருமுகங்கள் ஐந்தாகும். இவை முறையே நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம், கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம், தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம், வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம், மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகும். ஈசானம் முகம் படிக நிறத்திலும், தற்புருடம் முகம் நல்ல குங்கும நிறத்திலும், அகோரம் முகம் கருப்பு நிறத்திலும், வாமதேவம் முகம் செம்மையான அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும், சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றது. |
சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள\nசமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள\nசமயத்து எழுந்த சதிர் ஈர் எட்டு உள\nசமயத்து எழுந்த சதா சிவம் தானே | இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களிருந்து எழுவது ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய ஐந்து விதமான மேலாலவத்தைகளும், ஐந்து விதமான கீழாலவத்தைகளும், இராசிகளும், இறையருளால் கிடைக்கக் கூடிய விதமான பேறுகளும் உள்ளது. இந்த சமயங்கள் அனைத்தும் சதா சிவப் பரம்பொருளே ஆகும். |
அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்\nஅத் திசைக்கு உள்ளே அமர்ந்தன நால் வேதம்\nஅத் திசைக்கு உள்ளே அமர்ந்த சரிதையோடு\nஅத் திசைக்கு உள்ளே அமைந்த சமையமே | அண்ட சராசரங்களில் உள்ள பத்து திசைகளுக்கு உள்ளே வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவையும், நான்கு வேதங்களாகிய ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகியவையும், இறைவனை அடையும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும், இறைவனை அடையும் ஆறு சமயங்களாகிய தியானம், செபம், பூஜை, சக்கரம், ஞானம், புத்தி ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன. |
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை\nஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ\nஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்\nஆகின்ற சத்தி உள் அத் திசை பத்தே | அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற அசையும் சக்திக்கு உள்ளே உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும் நிலை பெறும். அதற்குள்ளிருந்து வெளிச்சமாகிய சக்தி எழுந்து வரும் போது அதனுள் சத்தமாகிய சிவமும் அமரும். அதற்குள்ளேயே அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் பத்து திசைகளும் அடங்கி இருக்கும். |
வேதா நெடு மால் உருத்திரன் மேல் ஈசன்\nமீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும்\nஆதார சத்தியும் ஆதி சிவனோடும்\nசாதாரணம் ஆகும் சதா சிவம் தானே | வேதங்களை ஓதி படைக்கின்ற பிரம்மன், அனைத்தையும் காக்கின்ற திருமால், மாயையை அழிக்கின்ற உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும், அவர்களுக்கு மேல் இருக்கின்ற மாயையால் மறைக்கின்ற மகேஸ்வரன், அடியவருக்கு அருளுகின்ற சதாசிவன் ஆகியவரோடு சேர்த்து ஐந்து விதமான தொழில்களை செய்கின்ற தெய்வங்களும், அவர்களுக்கு மேல் வெளிச்சமாகவும் சத்தமாகவும் அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாகிய பராசக்தியும், ஆதியாகிய பரமசிவனும் ஆகிய இந்த அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானதாகவும் அனைத்திற்கும் மேலானதாகவும் அன்பே வடிவமாகவும் இலிங்க அடையாளம் கொண்டும் இருப்பதே சதாசிவப் பரம்பொருள் ஆகும். |
கூடிய பாதம் இரண்டும் படி மிசை\nபாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழும்\nதேடும் முகம் ஐந்தும் செம் கணின் மூ ஐந்து\nநாடும் சதா சிவம் நல் ஒளி முத்தே | அனைத்திற்கும் மேலான சிவப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் திருவுருவமானது அடியவர்களை மேல் நிலைக்கு கொண்டு செல்லும் இணைந்தே இருக்கின்ற இரண்டு திருவடிகளைக் கொண்டும், பத்து திசைகளுக்கும் பரந்து எட்டுகின்ற பத்து திருக்கரங்களைக் கொண்டும், ஐந்து திருமுகங்களைக் கொண்டும், அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்களைக் கொண்டும், ஒப்பில்லாத முத்துப் போல பிரகாசமான ஒளி வீசும் ஜோதி அம்சமாகவும் இருக்கின்றது. உருவமே இல்லாத இறைவனுக்கு இப்படி அடியவர்கள் காணக்கூடிய அருவுருவமான வடிவமாக இருப்பதே சதாசிவ இலிங்கம் ஆகும். |
கோ இல் கொண்டான் அடி கொல்லை பெரும் உறை\nவா இல் கொண்டான் அடி நாடிகள் பத்து உள\nபூசை கொண்டான் அடி புனைந்தும் புற்கு இட்டு\nவா இல் கொண்டான் எங்கள் மா நந்தி தானே | அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்ட இறைவன் தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்கு செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டு தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்து, அந்த உடலைக் கொண்ட அடியவரை தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான். |
கோ இல் கொண்ட அன்றே குடி கொண்டது ஐவரும்\nவா இல் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்\nதா இல் கொண்டால் போல் தலைவன் என் உள் புக\nவா இல் கொண்டு ஈசனும் வாழ வந்தானே | உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றை தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்து பிறக்கும் போதே ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று அந்த புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றார்களோ அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடி தாய் தானாகவே வருவது போல இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து அடியவரை ஆட்கொண்டு அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு வீற்றிருந்து அருளுவான். |
உலந்தனர் பின்னும் உளர் என நிற்பர்\nநிலம் தரும் நீர் தெளி ஊன் அவை செய்ய\nபுலம் தரும் பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக\nவலம் தரும் தேவரை வந்தி செயீரே | இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும் இனியும் பிறவி வேண்டும் என்று இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசையும் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை தருகின்ற பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதை செய்யுங்கள். |
மானிடர் ஆக்கை வடிவு சிவ இலிங்கம்\nமானிடர் ஆக்கை வடிவு சிதம்பரம்\nமானிடர் ஆக்கை வடிவு சதா சிவம்\nமானிடர் ஆக்கை வடிவு திரு கூத்தே | இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாகவும், சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாகவும், அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகவும், இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாகவும் இருக்கின்றது. |
தரை உற்ற சத்தி தனி இலிங்கம் விண் ஆய்\nதிரை பொரு நீர் அது மஞ்சன மாலை\nவரை தவழ் மஞ்சு நீர் வான் உடு மாலை\nகரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே | நிலத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில் ஆகாயமாக இருக்கின்றாள். அலை மிகுந்த கடல்களில் இருக்கின்ற நீர்கள் எல்லாம் இறைவனுக்கு அபிஷேகமாக சாற்றிக் கொண்டே இருக்கின்றது. மலை உச்சியில் தவழ்கின்ற மேகங்களிலுள்ள தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது. எல்லை இல்லாத குருநாதராகிய இறைவனின் ஆடையாக அனைத்து திசைகளும் இருக்கின்றது. |
போது புனை கழல் பூமி அது ஆவது\nமாது புனை முடி வானகம் ஆவது\nநீதி உள் ஈசன் உடல் விசும்பு ஆய் நிற்கும்\nஆதி உற நின்றது அப் பரிசு ஆமே | மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றது. இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது. தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது. ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும். |
அகல் இடம் ஆய் அறியாமல் அடங்கும்\nஉகல் இடம் ஆய் நின்ற ஊன் அதின் உள்ளே\nபகல் இடம் ஆம் முன்னம் பாவ விநாசன்\nபுகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே | அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள் அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான். அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்து, யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான் புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன். |
அது உணர்ந்தேன் ஒரு தன்மையை நாடி\nஎது உணரா வகை நின்றனன் ஈசன்\nபுது உணர்வு ஆன புவனங்கள் எட்டும்\nஇது உணர்ந்த என் உடல் கோயில் கொண்டானே | அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்ற இறைவனை ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது, இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான உணர்வாக அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை எமக்குள் உணர்ந்த போது, அவன் எமது உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான். |
மறை அவர் அற்சனை வண் படிகம் தான்\nஇறை அவர் அற்சனை ஏய பொன் ஆகும்\nகுறை இல் வசீகரம் கோமளம் ஆகும்\nதுறை உடை சூத்திரர் தொல் வாள் இலிங்கமே | வேதங்களை உச்சரித்து சாதகர்கள் பூசை செய்கின்ற போது வடிவாக அமைக்கப் பட்ட படிக இலிங்கம் தான் பெற்ற மந்திரங்களை பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும். இறைவன் மேல் பக்தியோடு சாதகர்கள் பூசை செய்கின்ற போது அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற பொன் போல ஒளி வீசி அமைதியை கொடுக்கக் கூடியது ஆகும். அப்போது ஒரு குறையும் இல்லாத சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய பேரழகு பெற்ற இலிங்கமாக ஆகும். இவை எல்லாம் இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக ஏற்றுக் கொண்டு அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு ஆதியிலிருந்தே இருக்கின்ற ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும். |
துன்றும் தயிர் நெய் பால் தூய மெழுகு உடன்\nகன்றிய செப்பு கனல் இரதம் சலம்\nவன் திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன்\nதென்றி அம் கொன்றை தெளி சிவ இலிங்கமே | முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான தயிரும், நெய்யும், பாலும், கலப்படமில்லாத அரக்கும், இவற்றுடன் முறைப்படி புடம் போட்ட செம்பும், நெருப்பும் (விளக்கு, யாகம், போன்றவை), பழச்சாறும், தூய்மையான அபிஷேக நீரும், வலிமையாக சுடப்பட்டு இறுகிய செம்மையான கல்லும், அழகிய வடிவத்தை உடைய வில்வ இலையும், தங்கமும், மென்மையுடன் தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும் சிவபெருமானின் பரிபூரண இலிங்கம் ஆகும். |
முத்துடன் மாணிக்கம் ஒய்த்த பவளமும்\nகொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம்\nஅத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்\nஉத்தத்தின் சாதனம் பூ மண இலிங்கமே | முத்துக் கல்லும், மாணிக்கம் கல்லும், அவற்றுக்கு ஈடான பவளக் கல்லும், கொத்துகின்ற உளியும் அதை தட்ட உதவுகின்ற சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட சிலையில், திரு நீறும், கோமேதகக் கல்லும் அணிவித்து, அனைத்திற்கும் தந்தையான இறைவன் தனது உயிர்களுக்கு அருளிய சிவ ஆகமத்தில் உள்ளபடி சமைக்கப் பட்ட உணவும், சமைக்கப் படாத அரிசியும் படையலாக வைத்து, மனதை ஒருமுகப் படுத்துகின்ற கருவியாக அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும். |
தூய விமானமும் தூலம் அதாகும் ஆல்\nஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம்\nஆய பெலி பீடம் பத்திர இலிங்கம் ஆம்\nஆய அரன் நிலை ஆய்ந்து கொள் ஆர்களுக்கே | விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்} தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு இருக்கின்றது. ஆதலால் இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்} பரம் பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையை கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற பலி பீடமானது தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும். |
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்\nமா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லை\nமா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்\nபூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே | பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு உள்ளே நின்றும் உயிர்களுக்கு அருளும் வல்லமை பெற்றவன் அருள் வடிவான இறைவன். அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனின் உண்மையான தன்மையை உணர்ந்து அவனை அடைவதற்கான வழியில் செல்லுவதற்கு பெரும்பாலான உயிர்கள் முயற்சி செய்வது இல்லை. அவ்வாறு முயற்சி செய்கின்ற உயிர்களுக்கு அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின் நடுவுக்கு உள்ளே நிற்கின்ற பொன்னாலான கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக இறைவன் இருப்பான். |
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி\nஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்\nகண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்\nதண் சுடர் ஆய் எங்கும் தாபரம் ஆமே | அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும், ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும், அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும், எங்கும் பரந்து இருக்கின்றான். அவனே இலிங்க வடிவம் ஆகும். |
ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை\nவாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று\nஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று\nகாத்தனன் அவனின் கருத்து அறியாரே | எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை. |
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்\nஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்\nஏகமும் நல்கி இருக்கும் சதா சிவம்\nஆகம தத்துவா ஆல் சிவம் ஆமே | வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் () கடந்து இருக்கின்ற அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்கு கொடுத்து அருளுகின்ற பரம் பொருளே சதா சிவமாகும். அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும். |
உலகில் எடுத்தது சத்தி முதல் ஆய்\nஉலகில் எடுத்தது சத்தி வடிவு ஆய்\nஉலகில் எடுத்தது சத்தி குணம் ஆய்\nஉலகில் எடுத்த சதா சிவன் தானே | உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும். |
இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்\nஇலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்\nஇலிங்கம் அது ஆகுவது எண் எண் கலையும்\nஇலிங்கம் அது ஆக எடுத்தது உலகே | இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டு திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும், அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான். |
ஆயு மலரின் அணி மலர் மேல் அதும்\nஆய இதழும் பதினாறும் அங்கு உள\nதூய அறிவு சிவ ஆனந்தம் ஆகி போய்\nமேய அறிவு ஆய் விளைந்தது தானே | உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும். அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றது. இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும் பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளது. இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது இறைவனது பேரின்பத்தை தாங்குகின்ற பாத்திரமாக ஆகி விடுகின்றது. அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவு ஆக விளைய வைப்பதற்கு இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன. |
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ் உடல்\nபோகும் உடம்பும் பொருந்திய ஆறு தான்\nஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்\nஆகும் உடம்புக்கும் ஆறு அந்தம் ஆமே | ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிக்கின்றதும் ஆகும். உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில் ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்து இருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும். அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது ஐம்பது தத்துவங்களாகும். இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும் அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும். |
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்\nகூறிய ஆதாரம் ஆறும் குறி கொண்மின்\nஆறிய அக்கரம் ஆம் ஐம்பதின் மேலே\nஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே | ஆறு ஆதார சக்கரங்களின் எல்லைகளும் ஒன்றாக கூடி ஆகுகின்ற உயிர்களின் உடம்பினுள் சொல்லிய ஆதாரங்களாகிய ஆறு சக்கரங்களையும் குறிக்கோளாக கொண்டு சாதகம் செய்யுங்கள். அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும் வீற்றிருக்கின்ற எழுத்துக்களும் சக்தியூட்டம் பெற்று, ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு மேலே வீற்றிருந்து, அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற ஒரு எழுத்தாகிய ஓங்காரமாகவே மாறி இருக்கும். |
மேத ஆதியாலே விடாது ஓம் என தூண்டி\nஆதார சோதனை அத்துவ சோதனை\nதாது ஆரம் ஆகவே தான் எழ சாதித்தால்\nஆதாரம் செய் போகம் ஆவது காயமே | உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை ஆதியாக இருக்கின்ற இறைவனை இடைவிடாது எண்ணிக் கொண்டு ஓங்கார மந்திரத்தின் மூலம் தூண்டி எழுப்பி, உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை போலவே தானாகவே எழுச்சி பெறும் படி சாதகம் செய்து சாதித்தால், அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக செயல்பட்டு இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும் அழியாத பாத்திரமாக தமது உடலை மாற்றி விடும். |
ஆதார சோதனை ஆல் நாடி சுத்திகள்\nவேத ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி\nபோத ஆலயத்து புலன் கரண புந்தி\nசாதாரணம் கெட்டது ஆன சக மார்கமே | ஆறு ஆதாரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நாடிகளையும் சுத்தம் செய்த பிறகு வேதங்களுக்கு மூலமாகிய இறைவன் பதினாறு கலைகளாக தமக்குள் கலந்து வானத்தில் இருந்து உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு ஐந்து புலன்களும், நான்கு அந்தக் கரணங்களும், அறிவும், உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி செயல்படுவதே தோழமை வழி முறையாகும். |
மேல் என்றும் கீழ் என்றும் இரண்டு அற காணுங்கால்\nதான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்\nபார் எங்கும் ஆகி பரந்த பரா பரம்\nகார் ஒன்றும் கற்பகம் ஆகி நின்றானே | மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது, தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும், உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால், வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்து இருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம். |
ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தில்\nமேத ஆதி நாத அந்த மீது ஆம் பரா சத்தி\nபோத ஆலய அந்த விகாரம் தனில் போத\nமேத ஆர் இவ் ஆதாரம் ஈது ஆனம் உண்மையே | பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும், தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும், ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீது வீற்றிருப்பது அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும். அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும், அக்னியாகவும் முழுவதும் நிறைந்து இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே என்று யாம் உரைப்பது உண்மையே ஆகும். |
நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்\nகோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்\nமூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்\nகாலம் கண்டான் அடி காணலும் ஆமே | நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்த சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி, இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியை கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில் வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில் பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட, காலத்தை படைத்தவனும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை தரிசிக்கவும் முடியும். |
சற் குணம் வாய்மை தயா விவேகம் தண்மை\nசற் குரு பாதமே சாயை போல் நீங்காமே\nசிற் பர ஞானம் தெளிய தெளிவு ஓர்தல்\nஅற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே | எதிலும் உண்மையாகவே இருத்தல், எப்போதும் உண்மையையே பேசுதல், அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல், உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல், எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல், உண்மையான குருவின் திருவடிகளை அதன் நிழல் போல எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல், சித்தத்தில் இறைவனது பேரறிவு ஞானத்தை தெளிவாக உணரும் படி குருவின் அருளோடு தெளிவாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல், மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல், ஆகிய இவைகளோடு இருப்பவனே உண்மையான சீடன் ஆவான். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.