ID
int64 1
1.33k
| kural
stringlengths 43
78
| audio
audioduration (s) 4.32
8.04
| adhigaram
stringclasses 136
values | paal
stringclasses 3
values |
---|---|---|---|---|
201 | தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
202 | தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
203 | அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
204 | மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
205 | இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
206 | தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
207 | எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
208 | தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
209 | தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
210 | அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். | தீவினையச்சம் | அறத்துப்பால் |
|
211 | கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
212 | தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
213 | புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
214 | ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
215 | ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
216 | பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
217 | மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
218 | இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
219 | நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
220 | ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. | ஒப்புரவறிதல் | அறத்துப்பால் |
|
221 | வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. | ஈகை | அறத்துப்பால் |
|
222 | நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. | ஈகை | அறத்துப்பால் |
|
223 | இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. | ஈகை | அறத்துப்பால் |
|
224 | இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. | ஈகை | அறத்துப்பால் |
|
225 | ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். | ஈகை | அறத்துப்பால் |
|
226 | அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. | ஈகை | அறத்துப்பால் |
|
227 | பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. | ஈகை | அறத்துப்பால் |
|
228 | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். | ஈகை | அறத்துப்பால் |
|
229 | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். | ஈகை | அறத்துப்பால் |
|
230 | சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. | ஈகை | அறத்துப்பால் |
|
231 | ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. | புகழ் | அறத்துப்பால் |
|
232 | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். | புகழ் | அறத்துப்பால் |
|
233 | ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். | புகழ் | அறத்துப்பால் |
|
234 | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. | புகழ் | அறத்துப்பால் |
|
235 | நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. | புகழ் | அறத்துப்பால் |
|
236 | தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. | புகழ் | அறத்துப்பால் |
|
237 | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். | புகழ் | அறத்துப்பால் |
|
238 | வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். | புகழ் | அறத்துப்பால் |
|
239 | வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். | புகழ் | அறத்துப்பால் |
|
240 | வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். | புகழ் | அறத்துப்பால் |
|
241 | அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
242 | நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
243 | அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். | அருளுடைமை | அறத்துப்பால் |
|
244 | மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
245 | அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
246 | பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். | அருளுடைமை | அறத்துப்பால் |
|
247 | அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
248 | பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
249 | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். | அருளுடைமை | அறத்துப்பால் |
|
250 | வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. | அருளுடைமை | அறத்துப்பால் |
|
251 | தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
252 | பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
253 | படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
254 | அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
255 | உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
256 | தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
257 | உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
258 | செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
259 | அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
260 | கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். | புலான்மறுத்தல் | அறத்துப்பால் |
|
261 | உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. | தவம் | அறத்துப்பால் |
|
262 | தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. | தவம் | அறத்துப்பால் |
|
263 | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். | தவம் | அறத்துப்பால் |
|
264 | ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். | தவம் | அறத்துப்பால் |
|
265 | வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். | தவம் | அறத்துப்பால் |
|
266 | தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. | தவம் | அறத்துப்பால் |
|
267 | சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. | தவம் | அறத்துப்பால் |
|
268 | தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். | தவம் | அறத்துப்பால் |
|
269 | கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். | தவம் | அறத்துப்பால் |
|
270 | இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். | தவம் | அறத்துப்பால் |
|
271 | வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
272 | வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
273 | வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
274 | தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
275 | பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
276 | நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
277 | புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
278 | மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
279 | கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
280 | மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். | கூடாவொழுக்கம் | அறத்துப்பால் |
|
281 | எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. | கள்ளாமை | அறத்துப்பால் |
|
282 | உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
283 | களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
284 | களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
285 | அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
286 | அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
287 | களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
288 | அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. | கள்ளாமை | அறத்துப்பால் |
|
289 | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். | கள்ளாமை | அறத்துப்பால் |
|
290 | கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. | கள்ளாமை | அறத்துப்பால் |
|
291 | வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். | வாய்மை | அறத்துப்பால் |
|
292 | பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். | வாய்மை | அறத்துப்பால் |
|
293 | தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். | வாய்மை | அறத்துப்பால் |
|
294 | உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். | வாய்மை | அறத்துப்பால் |
|
295 | மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. | வாய்மை | அறத்துப்பால் |
|
296 | பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். | வாய்மை | அறத்துப்பால் |
|
297 | பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. | வாய்மை | அறத்துப்பால் |
|
298 | புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். | வாய்மை | அறத்துப்பால் |
|
299 | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. | வாய்மை | அறத்துப்பால் |
|
300 | யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. | வாய்மை | அறத்துப்பால் |
Subsets and Splits