ID
int64
1
1.33k
kural
stringlengths
43
78
audio
audioduration (s)
4.32
8.04
adhigaram
stringclasses
136 values
paal
stringclasses
3 values
201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
தீவினையச்சம்
அறத்துப்பால்
202
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
தீவினையச்சம்
அறத்துப்பால்
203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
தீவினையச்சம்
அறத்துப்பால்
204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
தீவினையச்சம்
அறத்துப்பால்
205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.
தீவினையச்சம்
அறத்துப்பால்
206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
தீவினையச்சம்
அறத்துப்பால்
207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
தீவினையச்சம்
அறத்துப்பால்
208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.
தீவினையச்சம்
அறத்துப்பால்
209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.
தீவினையச்சம்
அறத்துப்பால்
210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
தீவினையச்சம்
அறத்துப்பால்
211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒப்புரவறிதல்
அறத்துப்பால்
221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.
ஈகை
அறத்துப்பால்
222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.
ஈகை
அறத்துப்பால்
223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.
ஈகை
அறத்துப்பால்
224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.
ஈகை
அறத்துப்பால்
225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
ஈகை
அறத்துப்பால்
226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.
ஈகை
அறத்துப்பால்
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
ஈகை
அறத்துப்பால்
228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
ஈகை
அறத்துப்பால்
229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
ஈகை
அறத்துப்பால்
230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
ஈகை
அறத்துப்பால்
231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
புகழ்
அறத்துப்பால்
232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
புகழ்
அறத்துப்பால்
233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.
புகழ்
அறத்துப்பால்
234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.
புகழ்
அறத்துப்பால்
235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.
புகழ்
அறத்துப்பால்
236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
புகழ்
அறத்துப்பால்
237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.
புகழ்
அறத்துப்பால்
238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
புகழ்
அறத்துப்பால்
239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.
புகழ்
அறத்துப்பால்
240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
புகழ்
அறத்துப்பால்
241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
அருளுடைமை
அறத்துப்பால்
242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.
அருளுடைமை
அறத்துப்பால்
243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
அருளுடைமை
அறத்துப்பால்
244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
அருளுடைமை
அறத்துப்பால்
245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.
அருளுடைமை
அறத்துப்பால்
246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
அருளுடைமை
அறத்துப்பால்
247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
அருளுடைமை
அறத்துப்பால்
248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.
அருளுடைமை
அறத்துப்பால்
249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
அருளுடைமை
அறத்துப்பால்
250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.
அருளுடைமை
அறத்துப்பால்
251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
254
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.
புலான்மறுத்தல்
அறத்துப்பால்
261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
தவம்
அறத்துப்பால்
262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
தவம்
அறத்துப்பால்
263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
தவம்
அறத்துப்பால்
264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
தவம்
அறத்துப்பால்
265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
தவம்
அறத்துப்பால்
266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
தவம்
அறத்துப்பால்
267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
தவம்
அறத்துப்பால்
268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
தவம்
அறத்துப்பால்
269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
தவம்
அறத்துப்பால்
270
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
தவம்
அறத்துப்பால்
271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
கூடாவொழுக்கம்
அறத்துப்பால்
281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
கள்ளாமை
அறத்துப்பால்
282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
கள்ளாமை
அறத்துப்பால்
283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
கள்ளாமை
அறத்துப்பால்
284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
கள்ளாமை
அறத்துப்பால்
285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
கள்ளாமை
அறத்துப்பால்
286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.
கள்ளாமை
அறத்துப்பால்
287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
கள்ளாமை
அறத்துப்பால்
288
அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
கள்ளாமை
அறத்துப்பால்
289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
கள்ளாமை
அறத்துப்பால்
290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
கள்ளாமை
அறத்துப்பால்
291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
வாய்மை
அறத்துப்பால்
292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
வாய்மை
அறத்துப்பால்
293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
வாய்மை
அறத்துப்பால்
294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
வாய்மை
அறத்துப்பால்
295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
வாய்மை
அறத்துப்பால்
296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.
வாய்மை
அறத்துப்பால்
297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
வாய்மை
அறத்துப்பால்
298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.
வாய்மை
அறத்துப்பால்
299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
வாய்மை
அறத்துப்பால்
300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
வாய்மை
அறத்துப்பால்