ID
int64 1
1.33k
| kural
stringlengths 43
78
| audio
audioduration (s) 4.39
6
⌀ | adhigaram
stringclasses 136
values | paal
stringclasses 3
values |
---|---|---|---|---|
1 | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
2 | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
3 | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
4 | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
5 | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
6 | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
7 | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
8 | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
9 | இயல்கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
10 | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | கடவுள் வாழ்த்து | அறத்துப்பால் |
|
11 | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
12 | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
13 | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
14 | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
15 | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
16 | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
17 | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
18 | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
19 | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
20 | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | வான்சிறப்பு | அறத்துப்பால் |
|
21 | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
22 | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
23 | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
24 | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
25 | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
26 | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
27 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
28 | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
30 | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | நீத்தார் பெருமை | அறத்துப்பால் |
|
31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
36 | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
39 | அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
40 | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | அறன்வலியுறுத்தல் | அறத்துப்பால் |
|
41 | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
42 | துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
43 | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
44 | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
45 | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
46 | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
47 | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
48 | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
49 | அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
50 | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். | இல்வாழ்க்கை | அறத்துப்பால் |
|
51 | மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
52 | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
53 | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
54 | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
55 | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
56 | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
57 | சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
58 | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
59 | புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
60 | மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. | வாழ்க்கைத் துணைநலம் | அறத்துப்பால் |
|
61 | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
62 | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
63 | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
64 | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
65 | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
66 | குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
67 | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
68 | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
69 | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
70 | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். | புதல்வரைப் பெறுதல் | அறத்துப்பால் |
|
71 | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். | அன்புடைமை | அறத்துப்பால் |
|
72 | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
73 | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
74 | அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
75 | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
76 | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
77 | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். | அன்புடைமை | அறத்துப்பால் |
|
78 | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
79 | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
80 | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | அன்புடைமை | அறத்துப்பால் |
|
81 | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
82 | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
83 | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
84 | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
85 | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
86 | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
87 | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
88 | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
89 | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
90 | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. | விருந்தோம்பல் | அறத்துப்பால் |
|
91 | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
92 | அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
93 | முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
94 | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
95 | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
96 | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
97 | நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
98 | சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
99 | இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. | இனியவைகூறல் | அறத்துப்பால் |
|
100 | இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. | இனியவைகூறல் | அறத்துப்பால் |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
- Downloads last month
- 0